Breaking NewsA R ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து - அதிர்ச்சியில்...

A R ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து – அதிர்ச்சியில் ரசிகர்கள்

-

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மானை அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதளப் பதிவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய்ரா தரப்பிலிருந்து வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ரா தெரிவித்திருப்பதாவது, “எங்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையேயான காதலைக் கடந்தும், இருவருக்குமிடையே பிரிவும் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், சவாலான இந்த தருணத்தில், பொதுமக்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்கையை புரிந்துகொண்டு மதிப்பளிக்கவும்” என சாய்ரா பானு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியின் கடந்த 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

நூற்றுக்கணக்கான ஜெல்லிமீன்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மெல்பேர்ண் கடற்கரை

விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன . இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...