Newsகாஸாவில் நிவாரணப் பொருட்கள் கடத்திய கும்பல்

காஸாவில் நிவாரணப் பொருட்கள் கடத்திய கும்பல்

-

காஸாவில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 100 லொரிகளிலுள்ள நிவாரணப் பொருட்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்றுவரும் போரால் அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் நிலவிவருகிறது. ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸாவை இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் அந்தப் பகுதிக்கு போதுமான அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

இந்தச் சூழலில், மத்திய காஸா பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற சுமார் 100 லொரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் சுற்றிவளைத்து, அதிலிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஐ.நா. தெரிவித்தது.

போர் காரணமாக பெரும்பாலான மக்கள் புலம் பெயர்ந்துள்ள மத்திய காஸாவில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...