Breaking Newsஆஸ்திரேலிய குழந்தைகளின் சமூக ஊடகத் தடையின் மறு-விளக்கம்

ஆஸ்திரேலிய குழந்தைகளின் சமூக ஊடகத் தடையின் மறு-விளக்கம்

-

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய ஆஸ்திரேலிய மத்திய அரசு புதிய சட்டங்களை முன்மொழிந்துள்ளது.

எவ்வாறாயினும், எந்த சமூக ஊடக வலையமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறித்து குறிப்பிட்ட விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சமூக ஊடக வலையமைப்பை அணுக அனுமதித்தால் 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய விதிகள் TikTok, Facebook, Snapchat, Redit மற்றும் Instagram மற்றும் X போன்ற சமூக ஊடகங்களுக்கு பொருந்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் கூறியுள்ளார்.

மத்திய அரசு தற்போது இந்த சமூக ஊடக நெட்வொர்க்குகளை மட்டுமே நியமித்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிற சமூக ஊடக வலையமைப்புகளை அணுகுவது தடைசெய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தடை Facebook Messenger, Kids, Whatsapp, ReachOut, PeerChat, Kids Helpline MyCircle, Google Classroom மற்றும் YouTube போன்ற சமூக ஊடக நெட்வொர்க்குகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு தொடர்பான புதிய சட்டங்கள் இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் மாறலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...