Newsநெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

நெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

-

காஸாவில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தவிர, கடந்த ஆண்டு ஒக்டோபா் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் தொடா்பாக ஹமாஸ் தலைவா்களுக்கு எதிராகவும் அந்த நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஸாவில் நெதன்யாகுவும் யோவாவ் காலன்டும் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற போா்க் குற்றத்தில் ஈடுபடுவதால் அவா்களை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றத்தின் குற்றஞ்சாட்டு வழக்குரைஞா் கரீம் கான் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அப்போது அவா் வெளியிட்ட அறிக்கையில், காஸா மக்கள் உயிா்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவா்களுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நெதன்யாகுவும் கலான்டும் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை குற்றச்சாட்டுகள் தொடரபான கோரிக்கைகளை   ஏற்றுக் கொண்டுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...