Newsஅதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை இரத்து செய்த கென்யா

அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை இரத்து செய்த கென்யா

-

அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்ததைத் தொர்ந்து அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து அதானி குழுமத்தின் 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளது.

கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை குறித்த 30 ஆண்டு ஒப்பந்தத்திலேயே அதானி குழுமத்துடன் கென்யா கைச்சாத்திட்டிருந்தது.

இந்நிலையிலேயே கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ குறித்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதானி குழும நிறுவனம் கடந்த மாதம் எரிசக்தி அமைச்சகத்துடன் கையொப்பமிட்ட 30 வருட, 736 மில்லியன் டொலர் பெறுமதியான பொது-தனியார் கூட்டு ஒப்பந்தத்தையும் இரத்து செய்வதாக ரூட்டோ கூறினார்.

Latest news

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...

ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் robotics

ஆஸ்திரேலியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களை ஊக்குவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு robotics அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, coding வகுப்புகள், electronic tablet மற்றும்...

குற்றச் செயல்களுக்காக குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவைக் கண்டறிய நடவடிக்கைகள்

துப்பாக்கிச் சூடு மற்றும் வீடு கொள்ளைகளை நடத்துவதற்கு குழந்தைகளைச் சேர்ப்பதாக ஒரு புதிய குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. G7 என்று அழைக்கப்படும் இந்தக் குழுவில்...

விக்டோரியாவில் கால் பகுதி குடும்பங்கள் விரைவில் $100 மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்

விக்டோரியாவின் அடுத்த சுற்று மின் சேமிப்பு போனஸுக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 25 முதல், சலுகை அட்டை உள்ள சுமார் 900,000...