Newsவிக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

விக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

-

“Beyond The Valley” திருவிழாவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி 1 வரை Geelong அருகே நடைபெறும் “Beyond The Valley” திருவிழாவில் 35,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திருவிழாவின் மூலம் முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், “Beyond The Valley” உட்பட புதிய வருடத்தில் நடைபெறவுள்ள மேலும் 10 நிகழ்வுகளுக்கு Pill Testing முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மெல்பேர்ணில் நடைபெற்ற Hardmission திருவிழாவில் MDMA என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 8 பேர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதையடுத்து, மாத்திரை பரிசோதனை முறையை நிறுவுமாறு நிபுணர்கள் கோரிக்கை விடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Pill Testing சேவையின் மூலம், அதிநவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள், திரவங்கள், இரசாயனங்கள் மற்றும் மருந்து வகைகள் போன்றவற்றை இரகசியமாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் மெல்பேர்ணில் மாத்திரை சோதனைக்கான நிரந்தர இடத்தைத் திறக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Latest news

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...