Newsவிக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

விக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

-

“Beyond The Valley” திருவிழாவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி 1 வரை Geelong அருகே நடைபெறும் “Beyond The Valley” திருவிழாவில் 35,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திருவிழாவின் மூலம் முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், “Beyond The Valley” உட்பட புதிய வருடத்தில் நடைபெறவுள்ள மேலும் 10 நிகழ்வுகளுக்கு Pill Testing முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மெல்பேர்ணில் நடைபெற்ற Hardmission திருவிழாவில் MDMA என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 8 பேர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதையடுத்து, மாத்திரை பரிசோதனை முறையை நிறுவுமாறு நிபுணர்கள் கோரிக்கை விடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Pill Testing சேவையின் மூலம், அதிநவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள், திரவங்கள், இரசாயனங்கள் மற்றும் மருந்து வகைகள் போன்றவற்றை இரகசியமாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் மெல்பேர்ணில் மாத்திரை சோதனைக்கான நிரந்தர இடத்தைத் திறக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...