Newsவிக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

விக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

-

“Beyond The Valley” திருவிழாவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி 1 வரை Geelong அருகே நடைபெறும் “Beyond The Valley” திருவிழாவில் 35,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திருவிழாவின் மூலம் முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், “Beyond The Valley” உட்பட புதிய வருடத்தில் நடைபெறவுள்ள மேலும் 10 நிகழ்வுகளுக்கு Pill Testing முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மெல்பேர்ணில் நடைபெற்ற Hardmission திருவிழாவில் MDMA என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 8 பேர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதையடுத்து, மாத்திரை பரிசோதனை முறையை நிறுவுமாறு நிபுணர்கள் கோரிக்கை விடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Pill Testing சேவையின் மூலம், அதிநவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள், திரவங்கள், இரசாயனங்கள் மற்றும் மருந்து வகைகள் போன்றவற்றை இரகசியமாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் மெல்பேர்ணில் மாத்திரை சோதனைக்கான நிரந்தர இடத்தைத் திறக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...