Newsவெப்ப அலை எச்சரிக்கை - இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும்...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

-

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிலக்கரியில் இயங்கும் பெரிய மின் நிலையங்களில் ஏற்படும் மின் தடைகளும் வெப்ப அலைகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சிட்னியின் சில பகுதிகள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 40Cயை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி வாரம் முழுவதும் வெப்பநிலை 30C என தொடரும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் நியூ சவுத் வேல்ஸ் கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலை குறைந்த அளவு முதல் கடுமையான தீவிர நிலை வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பிற்பகல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மின்சார விநியோகம் எதிர்பார்த்த நிலையில் இருக்காது என்றே Aemo அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3 மணி முதல் இரவு 10.30 வரையில் மின்சாரம் தடைபடும் நிலை இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத பராமரிப்பு காரணமாக கிட்டத்தட்ட ஆறு ஜிகாவாட் நிலக்கரி எரியும் மின் நிலையங்கள் இயங்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...