Newsவெப்ப அலை எச்சரிக்கை - இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும்...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

-

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிலக்கரியில் இயங்கும் பெரிய மின் நிலையங்களில் ஏற்படும் மின் தடைகளும் வெப்ப அலைகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சிட்னியின் சில பகுதிகள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 40Cயை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி வாரம் முழுவதும் வெப்பநிலை 30C என தொடரும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் நியூ சவுத் வேல்ஸ் கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலை குறைந்த அளவு முதல் கடுமையான தீவிர நிலை வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பிற்பகல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மின்சார விநியோகம் எதிர்பார்த்த நிலையில் இருக்காது என்றே Aemo அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3 மணி முதல் இரவு 10.30 வரையில் மின்சாரம் தடைபடும் நிலை இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத பராமரிப்பு காரணமாக கிட்டத்தட்ட ஆறு ஜிகாவாட் நிலக்கரி எரியும் மின் நிலையங்கள் இயங்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...