Cinemaசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

-

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது. தற்போது, இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்கும் என்பதால், ஒரு ஹீரோவையே வில்லனாக தேர்வு செய்ய வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது ஜெயம் ரவி சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு சமமான முக்கியத்துவம் மற்றும் ஹீரோவிடம் அடி வாங்கும் காட்சிகள் இருக்கக்கூடாது உள்பட சில நிபந்தனைகளுடன் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதே போல் அதர்வாவும் இந்த படத்தில் இணைகிறார் என்றும், இந்த படத்தின் மேக்கிங் செலவு மட்டுமே மொத்தம் 150 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்ததை அடுத்து, இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...

பராக் மற்றும் மிஷேல் ஒபாமாவை அவமதிக்கும் வீடியோவைப் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியைப் பகிர்ந்து,...

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...