Cinemaசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

-

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது. தற்போது, இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்கும் என்பதால், ஒரு ஹீரோவையே வில்லனாக தேர்வு செய்ய வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது ஜெயம் ரவி சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு சமமான முக்கியத்துவம் மற்றும் ஹீரோவிடம் அடி வாங்கும் காட்சிகள் இருக்கக்கூடாது உள்பட சில நிபந்தனைகளுடன் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதே போல் அதர்வாவும் இந்த படத்தில் இணைகிறார் என்றும், இந்த படத்தின் மேக்கிங் செலவு மட்டுமே மொத்தம் 150 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்ததை அடுத்து, இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...