Newsட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

-

அமெரிக்காவில் இம் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கெபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு வன்முறை மற்றும் உயிருக்கு ஆபத்து போன்ற மிரட்டல் வந்துள்ளது. அவர்களுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition- ஆட்சி அதிகாரம் மாறுதல்) செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சட்ட அமுலாக்க மற்றும் பிற அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக செயல்பட்டனர். டிரம்ப் மற்றும் நியமிக்கப்பட்டவர்களும் அவர்களின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

மேலும் நியூயார்க்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கும் மிரட்டல் வந்துள்ளது. இவர் ஐ.நா.வின் அடுத்த தூதராக செயல்பட இருக்கிறார்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...