Cinemaநயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

-

திருமண ஆவணப் படத்தில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தென்னிந்திய நடிகை நயன்தாரா அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்கவும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்ற பெயரில் உருவான படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படம் கடந்த நவம்வர் 18 ஆம் திகதி வெளியானது.

முன்னதாக, இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷின் வோண்டர்பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் பணியாற்றிய நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இடம்பெற்ற சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதற்கு எதிராக 10 கோடி இந்திய ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தனுஷ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ், சென்னை மேல் நீதிமன்றில் இன்று வழக்கு தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தொழில்துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்ப்

ஆஸ்திரேலிய எஃகுத் தொழிலுக்கு கடுமையான அடியாக, இறக்குமதிகள் மீதான தற்போதைய வரிகளை இரட்டிப்பாக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கிறார். ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன்...

நாளை முதல் உயரும் மாணவர் கடன் விகிதங்கள்!

நிலுவையில் உள்ள மாணவர் கடன்களைக் கொண்ட மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு $2.5 பில்லியனுக்கும் அதிகமான கடன் அதிகரிப்பு நாளை முதல் அமலுக்கு வரும். மாணவர் கடன்களை 20...

இளைஞர்களின் போதைப் பழக்கத்தால் முழு நாடும் ஆபத்தில்

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், Vaping-ஐ பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக ஒரு புதிய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் சுகாதார நிறுவனத்தின்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...