Cinemaநயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

-

திருமண ஆவணப் படத்தில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தென்னிந்திய நடிகை நயன்தாரா அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்கவும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்ற பெயரில் உருவான படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படம் கடந்த நவம்வர் 18 ஆம் திகதி வெளியானது.

முன்னதாக, இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷின் வோண்டர்பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் பணியாற்றிய நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இடம்பெற்ற சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதற்கு எதிராக 10 கோடி இந்திய ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தனுஷ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ், சென்னை மேல் நீதிமன்றில் இன்று வழக்கு தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...