Cinemaநயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

-

திருமண ஆவணப் படத்தில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தென்னிந்திய நடிகை நயன்தாரா அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்கவும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்ற பெயரில் உருவான படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படம் கடந்த நவம்வர் 18 ஆம் திகதி வெளியானது.

முன்னதாக, இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷின் வோண்டர்பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் பணியாற்றிய நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இடம்பெற்ற சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதற்கு எதிராக 10 கோடி இந்திய ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தனுஷ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ், சென்னை மேல் நீதிமன்றில் இன்று வழக்கு தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

நெடுஞ்சாலை விபத்துகளில் அதிகரித்து வரும் பாதசாரிகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது 2007...

நெடுஞ்சாலை விபத்துகளில் அதிகரித்து வரும் பாதசாரிகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது 2007...

விக்டோரியா காட்டுத்தீ குறித்து பிரதமர் ஜெசிந்தா ஆலனின் சிறப்பு அறிக்கை

விக்டோரியாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ பருவம் குறித்து முறையான மற்றும் சுயாதீனமான மறுஆய்வுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் உறுதியளித்துள்ளார். தீ...