Cinemaநயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

-

திருமண ஆவணப் படத்தில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தென்னிந்திய நடிகை நயன்தாரா அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்கவும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்ற பெயரில் உருவான படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படம் கடந்த நவம்வர் 18 ஆம் திகதி வெளியானது.

முன்னதாக, இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷின் வோண்டர்பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் பணியாற்றிய நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இடம்பெற்ற சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதற்கு எதிராக 10 கோடி இந்திய ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தனுஷ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ், சென்னை மேல் நீதிமன்றில் இன்று வழக்கு தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...