Newsகிழக்கு உகண்டாவில் மண்சரிவு - 13 பேர் பலி!

கிழக்கு உகண்டாவில் மண்சரிவு – 13 பேர் பலி!

-

கிழக்கு உகண்டாவில் உள்ள 6 கிராமங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 40 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள உகண்டா செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகையில், “மண்ணில் புதைந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என்றனர்.

மண்ணில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 பேர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழையின் காரணமாக புலம்புலி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதிநவீன புல்டோசர் வாகனம் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மண்சரில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

Dezi Freeman-ஐ தேட ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கை

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் Dezi Freeman-ஐ தேடும் பணி இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில்...

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மூடப்படும் மேலும் 4 தபால் நிலையங்கள்

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மேலும் நான்கு தபால் நிலையங்களை மூட ஆஸ்திரேலியா தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் உள்ளூர்வாசிகள் மிகவும் கோபமடைந்துள்ளனர் மற்றும் இதற்கு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...