Newsமாற்றப்பட்ட ஆஸ்திரேலியா மாணவர் விசா விதிகளை விமர்சித்துள்ள இந்தியா

மாற்றப்பட்ட ஆஸ்திரேலியா மாணவர் விசா விதிகளை விமர்சித்துள்ள இந்தியா

-

ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் 125 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது.

அதிகரித்துள்ள விசா கட்டணத்தால் இந்திய மாணவர்களின் சர்வதேச கல்வி கனவுகள் பொய்த்துவிட்டதாக Times of India செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சர்வதேச மாணவர் விசா கட்டணம் $710ல் இருந்து $1600 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கீர்த்தி வர்தன் இந்த விடயங்களை நேற்று (29) ராஜ்யசபாவில் முன்வைத்திருந்தார்.

இந்த அதிகரிப்பு காரணமாக அவுஸ்திரேலியாவில் கல்வி வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கல்வி கூட்டாண்மையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலியாவின் சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் இந்தியா முக்கிய பங்காற்றுவதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விசா கட்டணங்கள் மட்டும் அதிகரிக்கப்படவில்லை என்றும், ஆங்கில மொழி தேவை மற்றும் IELTS மதிப்பெண் 5.5ல் இருந்து 6.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாழ்க்கைச் செலவுக்கான சொத்துக்களைக் காட்டுவதில் அதே தொகை $24,505ல் இருந்து $29,710 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...