Newsவிக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை...

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை மற்றும் புயல் எச்சரிக்கை

-

இந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்படும் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், கிழக்கு விக்டோரியா மற்றும் வடக்கு டாஸ்மேனியா ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் மிரியம் பிராட்பரி தெரிவித்துள்ளார்.

கனமழையால் மாநிலத்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை படிப்படியாக குறைந்துள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழையுடன் கூடிய காலநிலை குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா பிரதேசங்களில் அடுத்த 72 மணித்தியாலங்களில் 30 மில்லிமீற்றர் முதல் 60 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்)...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவகையில் பயணத் திட்டங்களை அமைக்கும் ஆஸ்திரேலியர்கள்

உலகிலேயே அதிக செல்லப்பிராணி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே நாடு முழுவதும் செல்லப்பிராணி நட்பு விடுமுறைகள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. RSPCA இன்...