Newsவிக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை...

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை மற்றும் புயல் எச்சரிக்கை

-

இந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்படும் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், கிழக்கு விக்டோரியா மற்றும் வடக்கு டாஸ்மேனியா ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் மிரியம் பிராட்பரி தெரிவித்துள்ளார்.

கனமழையால் மாநிலத்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை படிப்படியாக குறைந்துள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழையுடன் கூடிய காலநிலை குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா பிரதேசங்களில் அடுத்த 72 மணித்தியாலங்களில் 30 மில்லிமீற்றர் முதல் 60 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...