Cinemaவெளியானது விடாமுயற்சி டீசர்!

வெளியானது விடாமுயற்சி டீசர்!

-

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் இறுதியாக க்டந்த 28ம் திகதி வெளியானது.

“எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என அட்டகாசமான வரிகளுடன் இந்த டீசர் ஹொலிவூட் பட தரத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக அநேகமான தடைகளை தாண்டி உருவாகி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டீசர் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றிரவு 11.08 மணியளவில் வெளியாகியுள்ளது.

இதனால், உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், மகிழ் திருமேனி அஜித்தை வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் எனக் கூறி டீசரை வைரல் ஆக்கும் முயற்சியில் நேற்றிரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

குட் பேட் அக்லி பொங்கல் ரிலீஸ் ஆகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்து வந்த நிலையில், அஜித் குமார் முதலில் விடாமுயற்சி படம் வரட்டும் என முடிவு செய்து அந்த படத்தின் பேட்ச் வொர்க்கையும் முடித்த நிலையில், தற்போது பொங்கல் 2025 ஆம் ஆண்டு விடாமுயற்சி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...