Newsசிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டு போர் - கைப்பற்றப்பட்ட அலெப்போ நகர்

சிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டு போர் – கைப்பற்றப்பட்ட அலெப்போ நகர்

-

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா ஜனாதிபதியாக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் ஜனாதிபதி பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷ்யா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக இது மாறியுள்ளது.

முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் இராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அலெப்போ நகரில் இருந்து இராணுவம் தாற்காலிகமாக பின்வாங்கி உள்ளது.

மேலும் அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்று காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

100 ஆசிரியர் அல்லாத வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ள NSW மாநிலம்

TAFE NSW நிறுவனத்தில் இருந்து சுமார் 100 ஆசிரியர் அல்லாத வேலைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸிற்கான போக்குவரத்து கிட்டத்தட்ட 1,000...

NSW-வில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் பலி

தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

Wood Heater புகையால் ஏற்படும் மரணங்கள் பற்றி வெளியான அறிக்கைகள்

குளிர்காலத்தில் ஆஸ்திரேலிய வீடுகளில் Wood Heater நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதிலிருந்து வெளியாகும் புகை, சுகாதார எச்சரிக்கைகளையும், அண்டை வீட்டாருக்கு இடையே தகராறுகளையும் ஏற்படுத்துவதாகக்...

14 வினாடிகளுக்குப் பிறகு விழுந்து நொறுங்கிய ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான Eris, வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Bowen நகரத்திலிருந்து ஏவப்பட்ட 14 வினாடிகளில் விழுந்து நொருங்கியது. இந்த ராக்கெட் சோதனை விமானம்...

14 வினாடிகளுக்குப் பிறகு விழுந்து நொறுங்கிய ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான Eris, வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Bowen நகரத்திலிருந்து ஏவப்பட்ட 14 வினாடிகளில் விழுந்து நொருங்கியது. இந்த ராக்கெட் சோதனை விமானம்...

திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய மணமகன்

மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் படுகாயமடைந்துள்ளார். நியூ சவுத் வேல்ஸின் Hunter Valley பகுதியில் உள்ள Mount View சாலையில் அவரும் அவரது...