Melbourneமெல்பேர்ணில் காணாமல் போயுள்ள பாலியல் குற்றவாளி

மெல்பேர்ணில் காணாமல் போயுள்ள பாலியல் குற்றவாளி

-

மெல்பேர்ணில் அடையாளம் காணப்பட்ட பாலியல் குற்றவாளி ஒருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்காணிப்பு உத்தரவின் கீழ் இருந்த 32 வயதுடைய குற்றவாளியான Theo Briggs நவம்பர் 30ம் திகதி மாலை 6.00 மணிக்குப் பின்னர் St Kilda-இல் காணாமல் போனார்.

இதற்கிடையில், இந்த குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், இவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை எதிர்பார்த்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் Mooroopna, Shepparton மற்றும் Beraii ஆகிய பகுதிகளில் அடிக்கடி நேரத்தை செலவிடுவதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிக்கு விசேட செய்தியொன்றை விடுத்துள்ள பொலிஸார், அவர் விரைவில் பொலிஸில் சரணடையுமாறும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நபரை மறைப்பதற்கு உதவி செய்யும் நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தற்போது, ​​இந்த குற்றவாளியின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொலிஸார், இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால், 000 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...