Newsஆஸ்திரேலியாவில் கடல் உணவு பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் கடல் உணவு பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள கடல் உணவு பிரியர்களுக்கு இந்த பண்டிகைக் காலம் அதிக லாபம் தரும் என்று ஆஸ்திரேலியா கடல் உணவுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, Seafood Lover வாடிக்கையாளர்கள் இம்முறை குறைந்த விலையில் உயர்தர இறால்களை வாங்க முடியும் என ஆஸ்திரேலியா கடல் உணவுத் துறையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வெரோனிகா பாபகோஸ்டா தெரிவித்தார்.

மெல்பேர்ணில் உள்ள நுகர்வோர் இந்த ஆண்டு இறால் மீது $10 முதல் $20 வரை சேமிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறால் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கிலோ நடுத்தர அளவிலான இறால் தற்போது $29.99 முதல் $35 வரை விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிலோ பெரிய அளவிலான இறால் $40 முதல் $50 வரை இருக்கும், அதே சமயம் ஒரு கிலோ இறாலின் விலை கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் $60 முதல் $65 வரை மதிப்பிடப்பட்டது.

எவ்வாறாயினும், விலை குறைப்பினால் உணவின் தரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஆஸ்திரேலியா கடல் உணவு நிறுவனம் தெரிவித்திருந்தது.

உயர்தர தயாரிப்புகள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஆன்லைன் இணையதளங்களில் ஏராளமாக கிடைக்கின்றன. மேலும் கடல் உணவுத் தொழில் இந்த பண்டிகைக் காலத்தில் சாதனை லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...