Melbourneமெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

மெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

-

அவுஸ்திரேலிய நகரமான மெல்பேர்ணில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் முகமூடி அணிந்த விசமிகள், அங்கு அமைந்துள்ள யூத தேவாலயத்துக்கு தீ வைத்துள்ளனர்.

இது நாடு முழுவதும் பரவலான கண்டனத்தைத் தூண்டியது.

அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு (1710 GMT) சில பக்தர்கள் உள்ளே இருந்தபோது தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தென்கிழக்கு மெல்பேர்ண் புறநகர் ரிப்போன்லியாவில் உள்ள கட்டிடத்தின் பெரும்பகுதி எரிந்து தீக்கிரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், எவருக்கும் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்ல‍ை என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புக்கு இடமில்லை என்றார்.

அதேநேரம், ஒரு வழிபாட்டுத் தலத்தில் இந்த வன்முறை, அச்சுறுத்தல் என்பது மூர்க்கத்தனமானது. இந்த தாக்குதல் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவதை தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளதும் அவர் குறிப்பிட்டார்.

விக்டோரியா மாநில காவல்துறையும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரும் கூட்டிணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

தென்கிழக்கு மெல்பேர்ணில் நடந்த பயங்கர விபத்து – இருவர் பலி

மெல்பேர்ணின் தென்கிழக்கில் இன்று அதிகாலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மெல்பேர்ணின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மீ...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...