Melbourneமெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

மெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

-

அவுஸ்திரேலிய நகரமான மெல்பேர்ணில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் முகமூடி அணிந்த விசமிகள், அங்கு அமைந்துள்ள யூத தேவாலயத்துக்கு தீ வைத்துள்ளனர்.

இது நாடு முழுவதும் பரவலான கண்டனத்தைத் தூண்டியது.

அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு (1710 GMT) சில பக்தர்கள் உள்ளே இருந்தபோது தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தென்கிழக்கு மெல்பேர்ண் புறநகர் ரிப்போன்லியாவில் உள்ள கட்டிடத்தின் பெரும்பகுதி எரிந்து தீக்கிரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், எவருக்கும் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்ல‍ை என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புக்கு இடமில்லை என்றார்.

அதேநேரம், ஒரு வழிபாட்டுத் தலத்தில் இந்த வன்முறை, அச்சுறுத்தல் என்பது மூர்க்கத்தனமானது. இந்த தாக்குதல் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவதை தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளதும் அவர் குறிப்பிட்டார்.

விக்டோரியா மாநில காவல்துறையும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரும் கூட்டிணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...