Newsஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு

ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு

-

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்பெயின் அரசு அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விற்கப்படும் செல்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை விரைவில் பார்க்கலாம். அதாவது, புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.செல்போன்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதில் எழுதப்பட்டிருக்கும்.

செல்போன் உபயோகிப்பதை ‘பொது சுகாதார தொற்றுநோய்’ எனக்குறிப்பிட்டுள்ள ஸ்பெயின் அரசு, நாட்டு மக்கள் அதிக நேரம் ஸ்மார்ட் தொலைபேசியை உபயோகிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பை எடுக்க உள்ளது.

இதில் மொபைல் போன்களின் தீய விளைவுகள் பற்றி இடம்பெறும். இதற்காக 250 பக்க அறிக்கை தயாரிக்க 50 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

13 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 வயது வரை டிஜிட்டல் சாதனம் கொடுக்கக்கூடாது. 6 வயது குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செல்போன் கொடுக்க வேண்டும்.

இது தவிர, 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...