News17 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிரப்பப்படும் Woolworths காலி அலமாரிகள்

17 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிரப்பப்படும் Woolworths காலி அலமாரிகள்

-

Woolworth பல்பொருள் அங்காடி சங்கிலியுடன் இணைக்கப்பட்ட விநியோக மையங்களின் ஊழியர்களால் 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொழில் நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சுமார் 1500 ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில்சார் நடவடிக்கையின் மூலம் Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலியின் விநியோக செயல்முறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஊழியர்களின் பணி வேகம் தொடர்பாக Woolworths நிறுவனம் நடவடிக்கை எடுப்பதை நிறுத்துவதையும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து அந்நிறுவனம் எடுத்துள்ள முடிவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் (UWU) செயலாளர் Tim Kennedy, இது தொடர்பான விடயங்களில் நிறுவன அதிகாரிகள் முன்னரே உரிய கவனம் செலுத்தியிருந்தால், இரு தரப்பினரும் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலி இந்த தொழில்முறை நடவடிக்கை காரணமாக குறைந்தது $50 மில்லியன் விற்பனையை இழந்ததாக கணக்கிட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...