News17 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிரப்பப்படும் Woolworths காலி அலமாரிகள்

17 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிரப்பப்படும் Woolworths காலி அலமாரிகள்

-

Woolworth பல்பொருள் அங்காடி சங்கிலியுடன் இணைக்கப்பட்ட விநியோக மையங்களின் ஊழியர்களால் 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொழில் நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சுமார் 1500 ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில்சார் நடவடிக்கையின் மூலம் Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலியின் விநியோக செயல்முறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஊழியர்களின் பணி வேகம் தொடர்பாக Woolworths நிறுவனம் நடவடிக்கை எடுப்பதை நிறுத்துவதையும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து அந்நிறுவனம் எடுத்துள்ள முடிவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் (UWU) செயலாளர் Tim Kennedy, இது தொடர்பான விடயங்களில் நிறுவன அதிகாரிகள் முன்னரே உரிய கவனம் செலுத்தியிருந்தால், இரு தரப்பினரும் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலி இந்த தொழில்முறை நடவடிக்கை காரணமாக குறைந்தது $50 மில்லியன் விற்பனையை இழந்ததாக கணக்கிட்டுள்ளது.

Latest news

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...