Newsமரண திகதியை துல்லியமாக கணிக்கும் AI செயலி

மரண திகதியை துல்லியமாக கணிக்கும் AI செயலி

-

ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும் கணிக்கக்கூடிய டெத் கிளாக் எனப்படும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தது என்னவோ கடந்த ஜூலையில். இது பற்றி பரவலாகப் பேசப்படுவது தற்போதுதான்.

ஒருவரது வயது, உயரம், எடை, தினமும் சாப்பிடும் உணவு, உடற்பயிற்சி அளவு உள்ளிட்ட தகவல்களை அளித்தால், அது அவரது மரணம் எப்போது நிகழும் என்பதை துல்லியமாகக் கூறிவிடுமாம். ஆனால், எந்த வகைகளில் எல்லாம் வாழ்முறையை மாற்றினால், இதனை மாற்றியமைக்கலாம் என்பதையும் அது கூறுகிறதாம்.

இதுவரை கிட்டத்தட்ட 5.3 கோடி பேர் இதனைப் பயன்படுத்தி தங்களது மரண திகதியை அறிந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 1.25 இலட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

உடல்நலம் மற்றும் உடற்பயற்சிகளில் அதிகம் கவனம் செலுத்துபவர்களுக்கு இந்த செயலி மிகவும் பிடித்தமானதாக உள்ளது. இதனைப் பயன்படுத்த இலவசம்தான் என்றாலும், இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஒருவர் எப்போது இறப்பார் என்று ஒரு திகதியைக் குறிப்பிடுகிறதோ, அதற்கான கவுன்டவுனை தொடங்கிவிடும்.

எப்போதாவது, நாம் எப்போது இறப்போம் என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டிருக்கிறோமா? ஒருவேளை அப்படி கேட்க விரும்பினால், அதற்கான பதிலாக இந்த ஏ.ஐ. செயலி இருக்கிறது.

இதில் ஒருவர் எங்கு வாழ்கிறார், சிகரெட் பிடிப்பவரா? வாழ்முறை எப்படி? என எல்லாவற்றையும் அதற்கு விளக்க வேண்டியது அவசியம். இந்த செயலியைப் பயன்படுத்துவோர், பிறந்த திகதி, இனம், எடை மற்றும் உயரம், வாழும் நாடு என அனைத்தையும் பதிவு செய்யப்படும்.

மரண திகதியை அறியாதவரைதான் வாழ்க்கை நிம்மதி என்று இதுவரை சொல்லி வந்த மனிதன், இனி மரண திகதியை அறிந்துகொள்வதுதான் நிம்மதி என்று சொல்லும் அளவுக்கு இந்த ஏ.ஐ. நிலைமையை மாற்றிவிடும் என்றுதான் சொல்ல வேண்டும்.

காரணம், ஒரு மனிதன் இதுவரை என்னதவறெல்லாம் செய்துவந்தானோ அதனை மாற்றுவதற்கான ஒரு விழிப்புணர்வாக இந்த செயலி உள்ளதாம்.

உடல் எடை அதிகமாக இருந்தால், அதனைக் குறைக்க அறிவுறுத்தி, அறிவுரை வழங்குவது, உடற்பயிற்சி செய்யச் சொல்வது, சிகரெட் பிடிப்பதால் எத்தனை ஆயுள்காலம் குறைகிறது என்பதை கண்கூடாகக் காட்டுவது, சரியான உணவை எடுத்துக்கொள்ள, எவ்வளவு மணி நேரம் உறங்க வேண்டும் என்று சொல்ல, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள என நமது உடல்நலனை கண்ணும் கருத்துமாகப் பார்த்து, நாம் அதனை செய்யும்போது, வாழ்நாளைக் கூட்டிக்காண்பிக்குமாம்.

எனவே, மரண திகதியை அறிந்துகொண்டால், செய்ய வேண்டிய தவறுகளை செய்யாமல், முறையாக வாழ முயல்வார்கள் என்று நம்புகிறது இந்த செயற்கை நுண்ணறிவு.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...