Cinemaபுஷ்பா - 2 வெளியாகி 5 நாட்களில் 922 கோடி வசூலித்து...

புஷ்பா – 2 வெளியாகி 5 நாட்களில் 922 கோடி வசூலித்து சாதனை

-

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

‘புஷ்பா 2’ முதல் நாள் வசூலாக (இந்திய ரூபா)294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் 5 நாள் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி 5 நாட்களில் (இந்திய ரூபா)922 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நாளை இத்திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest news

டன் கணக்கில் உணவை வீசுவதால் ஆஸ்திரேலியர்கள் சந்திக்கும் அபாயங்கள்

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுதோறும் 7.6 மில்லியன் டன் உணவை வீசுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. சராசரி வீட்டிற்கு சுமார் $2,500 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக RMIT பல்கலைக்கழகம்...

விமான டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்துள்ள Virgin Australia

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் மீண்டும் பங்குச் சந்தையில் இணைந்ததைத் தொடர்ந்து, விர்ஜின் ஆஸ்திரேலியாவின் பங்கு விலை 8% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊதிய இழப்புகள் காரணமாக சரிவைச் சந்தித்த...

ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து விபத்துக்களை அதிகரிக்கும் கைக்கடிகாரம்

வாகனம் ஓட்டும்போது smartwatchகளைப் பயன்படுத்துபவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அபராதங்கள் மாநிலத்தைப் பொறுத்து $125 முதல் $2,000 வரை இருக்கும். வாகனம் ஓட்டும்போது...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலிய பணவீக்கம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. பணவீக்க விகிதம் 2.8 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும்,...