Newsபெற்றோரை கொலை செய்யுமாறு 14 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய AI!

பெற்றோரை கொலை செய்யுமாறு 14 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய AI!

-

டெக்சாஸை சேர்ந்த தாய் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்ட நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சம்பவம், AI-யின் ஆபத்துகள் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது.

டெக்சாஸை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் அளவுக்கு மீறி செல்போன் பயன்படுத்தியதால், அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு அவரிடம் செல்போன் கொடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த சிறுவன் Character.AI என்ற AI Chatbot-ன் உதவியை நாடியுள்ளார்.

சிறுவனின் செல்போன் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த AI Chatbot அதிர்ச்சிகரமான பதிலை வழங்கியுள்ளது.

செல்போன் பயன்பாட்டுக்கு பெற்றோர் தடை விதிப்பதாகவும் அதற்கான தீர்வு குறித்து சிறுவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த AI Chatbot, பெற்றோரை கொலை செய்து விடுவதே தீர்வு என்று அறிவுறுத்தியுள்ளது.

Chatbot-இன் இந்த பதிலை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, Chatbot உடனான சிறுவனின் உரையாடல் தொடர்பான Screenshot ஒன்று சமர்பிக்கப்பட்டது.

இச்சம்பவம், AI தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் நிறுவனங்கள், அதன் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...