Newsவிக்டோரிய வாசிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எச்சரிக்கை

விக்டோரிய வாசிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எச்சரிக்கை

-

விக்டோரியாவில் வசிப்பவர்கள் எதிர்வரும் நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நேற்று மாலை வரை, விக்டோரியா மாநிலத்தின் Mallee பகுதியில் உள்ள Walpeup-இல் வெப்பநிலை 47.1 டிகிரி செல்சியஸை எட்டியது. இது டிசம்பரில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது.

மெல்பேர்ணின் CBD-லும் நேற்று மாலை வரை 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Geelong மற்றும் Ballarat ஆகிய பகுதிகளில் நேற்று முறையே 42.3 டிகிரி செல்சியஸ் மற்றும் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதுடன், இந்த காலகட்டத்தில் அந்த பகுதிகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும் என்று கூறப்படுகிறது.

மெல்பேர்ண் West Gate பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக கடும் புகை மூட்டமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக போக்குவரத்து சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Gleanpark, Pootila, Dean Wattle Flat போன்றவற்றில் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், Ballarat அருகே உள்ள Creswick குடியிருப்பாளர்களும் அப்பகுதியை காலி செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், Casterton-Edenhope சாலையில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக மேற்கு விம்மேரா பகுதியில் Chetwynd மற்றும் Power Creek பகுதியில் வசிப்பவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விக்டோரியா எமர்ஜென்சி சர்வீஸ் ஆப் (Vic Emergency App) மூலம் வழங்கப்படும் எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு மாநில வாசிகளுக்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...