Cinemaநடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தீர்மானம்

நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தீர்மானம்

-

பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். அவர்கள் இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிமை பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ‘JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதியாக நம்புகிறது.

ஜியோ ஸ்டுடியோஸின், துல்கர் சல்மான் நடித்த ‘ஹே சினாமிகா’ படம் மற்றும் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’, உள்ளிட்ட திரைப்படங்களை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ‘கோலி சோடா- தி ரைசிங்’ வெப் தொடரையும் தயாரித்துள்ளது.

Latest news

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

200% அதிகரித்துள்ள குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாடு

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது வியத்தகு முறையில் அதிகரித்து, விளையாட்டு, வாசிப்பு, இசை மற்றும் கலை ஆகியவற்றைக் கைவிடுவதற்கு...

மெல்பேர்ண் குழந்தைகள் மையத்தில் தாக்குதல் – தாய் மீது வழக்கு விசாரணை

மெல்பேர்ணில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது ஊனமுற்ற குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, ஒரு தாய் குற்றவியல்...