Breaking Newsபாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

பாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

-

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து மெல்பேர்ண் செல்லும் விமானத்தில் ​​41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணியிடம் பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பயணி, விமான ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.

அதன் பின்னர் விமான ஊழியர்கள் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில், குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக அவுஸ்திரேலியா விமானப் போக்குவரத்து குற்றவியல் சட்டத்துக்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

எவ்வாறெனினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி அன்று மெல்பேர்ண் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Latest news

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...