Breaking Newsபாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

பாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

-

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து மெல்பேர்ண் செல்லும் விமானத்தில் ​​41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணியிடம் பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பயணி, விமான ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.

அதன் பின்னர் விமான ஊழியர்கள் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில், குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக அவுஸ்திரேலியா விமானப் போக்குவரத்து குற்றவியல் சட்டத்துக்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

எவ்வாறெனினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி அன்று மெல்பேர்ண் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...