Breaking Newsபாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

பாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

-

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து மெல்பேர்ண் செல்லும் விமானத்தில் ​​41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணியிடம் பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பயணி, விமான ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.

அதன் பின்னர் விமான ஊழியர்கள் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில், குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக அவுஸ்திரேலியா விமானப் போக்குவரத்து குற்றவியல் சட்டத்துக்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

எவ்வாறெனினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி அன்று மெல்பேர்ண் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Latest news

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்)...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவகையில் பயணத் திட்டங்களை அமைக்கும் ஆஸ்திரேலியர்கள்

உலகிலேயே அதிக செல்லப்பிராணி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே நாடு முழுவதும் செல்லப்பிராணி நட்பு விடுமுறைகள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. RSPCA இன்...