Breaking Newsபாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

பாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

-

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து மெல்பேர்ண் செல்லும் விமானத்தில் ​​41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணியிடம் பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பயணி, விமான ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.

அதன் பின்னர் விமான ஊழியர்கள் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில், குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக அவுஸ்திரேலியா விமானப் போக்குவரத்து குற்றவியல் சட்டத்துக்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

எவ்வாறெனினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி அன்று மெல்பேர்ண் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Latest news

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வேண்டாம் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் பான நிறுவனம் தனது தயாரிப்பான ஆரஞ்சு பழச்சாறு வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடித்துள்ளது. இந்த ஆரஞ்சு சாறு பானத்தில் Alcohol...

பணமோசடி மோசடி தொடர்பாக விக்டோரியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடிப்பு

மாண்டரின் மொழி பேசும் ஆஸ்திரேலியர்களை குறிவைத்து மோசடி செய்பவர்கள் குழு ஒன்று செயல்படுவதாக மத்திய காவல்துறை எச்சரித்துள்ளது. சீன காவல்துறை அல்லது சீன அதிகாரிகள் மாண்டரின் மொழி...

ஆஸ்திரேலியாவில் அதிகமாக உள்ள சுகாதார நிபுணர்கள்

ஆஸ்திரேலிய புள்ளிவிவரங்கள் ஜனவரி மாதத்தில் வேலைவாய்ப்பு சந்தை வலுப்பெற்றதாக வெளிப்படுத்துகின்றன. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஜனவரி மாதத்தில் ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி 3.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாகக் கூறுகிறது. வளர்ந்த...

வீட்டுத் திட்டங்கள் காரணமாக வாடகை விலைகள் மேலும் அதிகரிக்கும் அறிகுறிகள்

வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவின் புறநகர்ப் பகுதிகளிலும் வாடகை வீடுகளின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். சிட்னியில் கட்டப்பட உள்ள ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியாவில் அதிகமாக உள்ள சுகாதார நிபுணர்கள்

ஆஸ்திரேலிய புள்ளிவிவரங்கள் ஜனவரி மாதத்தில் வேலைவாய்ப்பு சந்தை வலுப்பெற்றதாக வெளிப்படுத்துகின்றன. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஜனவரி மாதத்தில் ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி 3.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாகக் கூறுகிறது. வளர்ந்த...