Breaking Newsஜனவரி 01 முதல் விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்வு

ஜனவரி 01 முதல் விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்வு

-

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர், விக்டோரியாவில் பொது போக்குவரத்து கட்டணங்கள் ஜனவரி 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 1 முதல் விக்டோரியா பொது போக்குவரத்து நெட்வொர்க்கில் தினசரி கட்டண வரம்பு $ 11 ஆக நிர்ணயிக்கப்படும் என்று அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போதைய $10.60 தினசரி வரம்பு 40 காசுகள் அதிகரிக்கும்.

வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் வரம்பு 40 காசுகள் அதிகரித்து இந்த எண்ணிக்கை $7.60 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி சலுகை கட்டண வரம்பு $5.30ல் இருந்து $5.50 ஆகவும், வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கான சலுகை வரம்பு $3.60ல் இருந்து $3.80 ஆகவும் அதிகரிக்கும்.

கிறிஸ்மஸ் தினத்தன்று விக்டோரியாவில் அனைத்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இலவசம் என்ற அறிவிப்பில், ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

எவ்வாறாயினும், பிராந்திய கட்டண வரம்பின் தற்போதைய பெறுமதியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...