Newsஆட்குறைப்பு செய்த Google நிறுவனம் - தொழிலை இழந்த ஊழியர்கள்

ஆட்குறைப்பு செய்த Google நிறுவனம் – தொழிலை இழந்த ஊழியர்கள்

-

Google நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நாட்களில் Google இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம் Google செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் Google நிறுவனத்தில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

மேலாளர், இயக்குநர், துணைத்தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

”நிறுவனத்தின் செயல்திறனை இரட்டிப்பாக மாற்றுவதற்காக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. நிர்வாகப் பிரிவில் உள்ள சிலர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு அனுப்பப்படவுள்ளனர். சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Google நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது. அதைத் தொடர்ந்து தற்போது நிர்வாகப் பிரிவில் உள்ள 10 சதவீதம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் மட்டும் 4 முறை ஆட்குறைப்பு பணியை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...