Newsஆட்குறைப்பு செய்த Google நிறுவனம் - தொழிலை இழந்த ஊழியர்கள்

ஆட்குறைப்பு செய்த Google நிறுவனம் – தொழிலை இழந்த ஊழியர்கள்

-

Google நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நாட்களில் Google இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம் Google செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் Google நிறுவனத்தில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

மேலாளர், இயக்குநர், துணைத்தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

”நிறுவனத்தின் செயல்திறனை இரட்டிப்பாக மாற்றுவதற்காக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. நிர்வாகப் பிரிவில் உள்ள சிலர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு அனுப்பப்படவுள்ளனர். சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Google நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது. அதைத் தொடர்ந்து தற்போது நிர்வாகப் பிரிவில் உள்ள 10 சதவீதம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் மட்டும் 4 முறை ஆட்குறைப்பு பணியை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...