Newsசிங்கப்பூரின் அளவை விட அதிகமாக சேதமாகியுள்ள விக்டோரியா காட்டுத்தீ

சிங்கப்பூரின் அளவை விட அதிகமாக சேதமாகியுள்ள விக்டோரியா காட்டுத்தீ

-

விக்டோரியாவில் உள்ள கிராம்பியன்ஸ் பகுதியில் காட்டுத் தீ பரவியது.

இதன் காரணமாக அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிராமியப் பகுதியில் சுமார் 74,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுக்கடங்காத காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருவதால் குறைந்தபட்சம் ஒரு வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 74,000 ஹெக்டேர் நாசமாகியுள்ளது. இந்த சேதம் சிங்கப்பூரின் அளவிற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இந்த அபாயம் இன்னும் சில வாரங்களில் மேலும் பரவும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் கால்நடை வளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு குழுக்களுக்கு இன்று மிகவும் சவாலான நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமியன்ஸ் தேசிய பூங்காவில் தற்போது சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...