Newsஇன்று முதல் விக்டோரியர்களுக்கு Pill Testing பரிசோதனை

இன்று முதல் விக்டோரியர்களுக்கு Pill Testing பரிசோதனை

-

இன்று முதல் ஜனவரி 1ம் திகதி வரை 4 நாட்களுக்கு, சட்டப்படியான அனுமதியுடன் விக்டோரியாவில் முதல் முறையாக Pill Testing நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் நடக்கவிருக்கும் Beyond The Valley இசை நிகழ்ச்சியின் போது இந்த பரிசோதனையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, அவுஸ்திரேலியர்கள் இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை Pill Testing சேவைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும், இசை நிகழ்ச்சி நடைபெறும் 4 நாட்களும் அந்த சேவைகள் இலவசமாகவும் கிடைக்கும்.

விக்டோரியாவின் மனநல அமைச்சர் மேரி-ஆன் தாமஸ், Pill Testing மூலம், போதைப்பொருள் பாதிப்பைக் குறைக்கும் வாய்ப்பைப் பெறுவதாகவும், பலர் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகளை பரிசோதிக்க மாத்திரை பரிசோதகர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் மனநல அமைச்சர் மேரி-ஆன் தாமஸ், இது ஒரு சமூக சேவை என்றும், போதைப்பொருளின் ஆபத்தில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்றும் வாய்ப்பு என்றும் கூறினார்.

இந்த மாத்திரை பரிசோதனையின் மூலம் விக்டோரியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த விழிப்புணர்வு வழங்கப்படுவதுடன் இளைஞர் சமூகத்தின் கவனத்தை இதில் செலுத்த வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...