Cinemaபிணைத்தொகை உத்தரவுடன் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்

பிணைத்தொகை உத்தரவுடன் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்

-

ஐதராபாத்தில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 13ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்த அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் பொலிஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் தரப்பில் ஜாமீன் மனு கோரப்பட்டது. ஆனால், பொலிஸார் அதனை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நாம்பள்ளி நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் அளித்துள்ளது. அத்துடன் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தொழில்துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்ப்

ஆஸ்திரேலிய எஃகுத் தொழிலுக்கு கடுமையான அடியாக, இறக்குமதிகள் மீதான தற்போதைய வரிகளை இரட்டிப்பாக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கிறார். ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன்...

நாளை முதல் உயரும் மாணவர் கடன் விகிதங்கள்!

நிலுவையில் உள்ள மாணவர் கடன்களைக் கொண்ட மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு $2.5 பில்லியனுக்கும் அதிகமான கடன் அதிகரிப்பு நாளை முதல் அமலுக்கு வரும். மாணவர் கடன்களை 20...

இளைஞர்களின் போதைப் பழக்கத்தால் முழு நாடும் ஆபத்தில்

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், Vaping-ஐ பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக ஒரு புதிய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் சுகாதார நிறுவனத்தின்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...