Cinemaபிணைத்தொகை உத்தரவுடன் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்

பிணைத்தொகை உத்தரவுடன் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்

-

ஐதராபாத்தில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 13ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்த அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் பொலிஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் தரப்பில் ஜாமீன் மனு கோரப்பட்டது. ஆனால், பொலிஸார் அதனை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நாம்பள்ளி நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் அளித்துள்ளது. அத்துடன் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...