Sportsஉலகின் வயதான ஒலிம்பிக் சம்பியன் காலமானார்!

உலகின் வயதான ஒலிம்பிக் சம்பியன் காலமானார்!

-

ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சம்பியன் Agnes Geletti காலமானார்.

103ஆவது வயதான இவர் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள வைத்தியசாலையில் நேற்று (02) உயிரிழந்துள்ளார்.

1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது.

பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் Geletti என இவர் மாற்றிக்கொண்டார்.

ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.

அழித்தொழிப்பில் இருந்து தப்பிய Geletti போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துக்கொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

இஸ்ரேலில் குடியேறிய அவர் ரோபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

Geletti ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் திகதி தனது 104ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

சந்தையில் இருந்து நீக்கப்பட்டபிரபலமான Sunscreen தயாரிப்பு

பிரபலமான Sunscreen தயாரிப்பு ஆஸ்திரேலிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரபலமான Sunscreen பிராண்டான Ultra Violette, அதன் Lean Screen SPF 50+ Mattifying...

பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Noojee Trestle பாலம்

விக்டோரியாவின் மிக உயரமான மரப் பாலமான Gippsland-இல் உள்ள Noojee Trestle பாலம், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் பாதுகாப்புப் பழுதுபார்ப்புக்காக கடந்த மே மாதம்...

ரணில் ஏன் ஜாமீனை இழந்தார்?

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உயர்...

அழகான சமையல் பாத்திரங்களை வாங்குவது உடல்நலத்திற்கு ஆபத்தானது!

வீட்டு சமையலறை பயன்பாட்டிற்கான சமையல் உபகரணங்களை வாங்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான பொருளாக சிலிகானை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெர்மனியின்...

பெர்த் மழைநீர் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய் கண்டுபிடிக்கப்பட்டார்!

பெர்த் மழைநீர் வடிகாலில் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட தனது பிறந்த மகனின் மரணத்தை மறைத்ததாக ஒரு தாய் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து...

ட்ரம்பின் Alligator Alcatraz தடுப்பு மையத்தை அகற்ற நீதிபதி உத்தரவு.

புளோரிடாவில் உள்ள "Alligator Alcatraz" இல் புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஒரு கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் Florida Everglades-இல் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு...