Newsவிண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

-

விண்வெளியில் தாவர வளர்ப்புப் பரிசோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலில் ஏழு நாட்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாட்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆராயும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு முதல்கட்ட வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது.

விண்வெளியில் செடி வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சியாக, (CROPS) பி.எஸ்.எல்.வி-சி60 மூலம் ஏவப்பட்ட 24 செயற்கைக்கோள்களில் வி.எஸ்.எஸ்.சி துணைச் செயற்கைக் கோளும் ஒன்று.

அதாவது, பி.எஸ்.எல்.வி-சி60 ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் வி.எஸ்.எஸ்.சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது.

விண்வெளியில் அதன் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாத்திரை போல நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளைக் கொண்டிருக்கும் அந்த பெட்டகத்திலிருந்து ஒரு காராமணி விதை முளைவிட்டிருக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...