Newsவிண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

-

விண்வெளியில் தாவர வளர்ப்புப் பரிசோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலில் ஏழு நாட்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாட்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆராயும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு முதல்கட்ட வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது.

விண்வெளியில் செடி வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சியாக, (CROPS) பி.எஸ்.எல்.வி-சி60 மூலம் ஏவப்பட்ட 24 செயற்கைக்கோள்களில் வி.எஸ்.எஸ்.சி துணைச் செயற்கைக் கோளும் ஒன்று.

அதாவது, பி.எஸ்.எல்.வி-சி60 ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் வி.எஸ்.எஸ்.சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது.

விண்வெளியில் அதன் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாத்திரை போல நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளைக் கொண்டிருக்கும் அந்த பெட்டகத்திலிருந்து ஒரு காராமணி விதை முளைவிட்டிருக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது

Latest news

2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பாலியல் குறித்த புதிய கேள்விகள்

ஆஸ்திரேலியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்த முறை, பாலினம் தொடர்பான...

விமான விபத்து காரணமாக மூடப்பட்ட விமான நிலையம்

விமான விபத்து காரணமாக லண்டன் Southend விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு இலகுரக விமானம் ஈடுபட்டதாகவும், புறப்பட்ட...

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடுமையான வேலை வெட்டுக்கள்

டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின்...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

ஆசிய வர்த்தகத்தின் மீது திரும்பிய ஆஸ்திரேலியாவின் கவனம்

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ஆசிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக ஆஸ்திரேலியா இருக்க விரும்புவதாகவும், பொருளாதார உறவுகளை...