NewsOpen AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

Open AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

-

அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், அந்நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.

அதன் பின்னர் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில் சுசிர் பாலாஜி இறந்து கிடந்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் முதலில் தெரிவித்தனர். ஆனால் இளைஞரின் பெற்றோர் அதனை மறுத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் விசாரணையில் சுசிர் பாலாஜியின் அறையில் இருந்த சிசிடிவி கமெராக்கள், பென்டிரைவ் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மேலும், சுசிர் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக தலையில் சுடப்பட்டிருக்கலாம் என்றும், அவரது அறை சூறையாடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுசிரின் கணினியில் இருந்த தரவுகளை யாரோ எடுத்திருப்பதாகவும் விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பிரேத பரிசோதனை மற்றும் அவரது அறையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

NSW-ல் வேட்டையாடச் சென்றபோது காலில் சுடப்பட்ட 9 வயது சிறுவன்

வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே...

வயதான ஓட்டுநர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்

91 வயது முதியவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து மூன்று பேர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு...

ஆஸ்திரேலியர்களுக்கு கூகிளில் தேடும்போது புதிய விதிகள் அறிமுகம்

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ஆஸ்திரேலியர்கள் இப்போது கூகிள் தேடலை அணுகும்போது தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும். இது இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய...

வயதான ஓட்டுநர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்

91 வயது முதியவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து மூன்று பேர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு...

ஆஸ்திரேலியர்களுக்கு கூகிளில் தேடும்போது புதிய விதிகள் அறிமுகம்

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ஆஸ்திரேலியர்கள் இப்போது கூகிள் தேடலை அணுகும்போது தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும். இது இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய...