News217 டிசைனர் கைப்பைகள்; 75 ஆடம்பர கைக்கடிகாரங்கள் வைத்துள்ள தாய்லாந்து பிரதமர்

217 டிசைனர் கைப்பைகள்; 75 ஆடம்பர கைக்கடிகாரங்கள் வைத்துள்ள தாய்லாந்து பிரதமர்

-

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு (Paetongtarn Shinawatra) 13.8 பில்லியன் பாட் (அமெரிக்க டொலரில் 400 மில்லியன்) சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தின் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (NACC) அந்நாட்டு பிரதமர் தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.

இதனை அவரது பியூ தாய் கட்சி உறுதி செய்துள்ளது. அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவுக்கு 13.8 பில்லியன் பாட் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அதில், 11 பில்லியன் பாட் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் பாட்டை அவர் ரொக்கம் மற்றும் டெபாசிட்டாக வைத்துள்ளார்.

மேலும், 75 ஆடம்பர கைக்கடிகாரங்களின் மதிப்பு 162 மில்லியன் பாட். 217 டிசைனர் ஹேண்ட்பேக்குகளின் மதிப்பு 76 மில்லியன் பாட். இவைதவிர, லண்டன் மற்றும் ஜப்பானில் அவருக்கு சொத்துகள் உள்ளன.

ஷினவத்ராவுக்கு 05 பில்லியன் பாட் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நிகர சொத்து மதிப்பு 8.9 பில்லியன் பாட் ஆகும். அமெரிக்க மதிப்பில் 258 மில்லியன் டொலராகும். இவ்வாறு அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தற்போதைய பிரதமர் பேடோங்டர்ன், முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள் ஆவார். இவர், கடந்த செப்டெம்பரில் தாய்லாந்து பிரதமராக பொறுப்பேற்றார். தாய்லாந்தை இவரது குடும்பம் தான் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தை ஆளும் அந்த குடும்பத்தின் நான்காவது வாரிசுதான் பேடோங்டர்ன்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...