News217 டிசைனர் கைப்பைகள்; 75 ஆடம்பர கைக்கடிகாரங்கள் வைத்துள்ள தாய்லாந்து பிரதமர்

217 டிசைனர் கைப்பைகள்; 75 ஆடம்பர கைக்கடிகாரங்கள் வைத்துள்ள தாய்லாந்து பிரதமர்

-

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு (Paetongtarn Shinawatra) 13.8 பில்லியன் பாட் (அமெரிக்க டொலரில் 400 மில்லியன்) சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தின் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (NACC) அந்நாட்டு பிரதமர் தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.

இதனை அவரது பியூ தாய் கட்சி உறுதி செய்துள்ளது. அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவுக்கு 13.8 பில்லியன் பாட் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அதில், 11 பில்லியன் பாட் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் பாட்டை அவர் ரொக்கம் மற்றும் டெபாசிட்டாக வைத்துள்ளார்.

மேலும், 75 ஆடம்பர கைக்கடிகாரங்களின் மதிப்பு 162 மில்லியன் பாட். 217 டிசைனர் ஹேண்ட்பேக்குகளின் மதிப்பு 76 மில்லியன் பாட். இவைதவிர, லண்டன் மற்றும் ஜப்பானில் அவருக்கு சொத்துகள் உள்ளன.

ஷினவத்ராவுக்கு 05 பில்லியன் பாட் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நிகர சொத்து மதிப்பு 8.9 பில்லியன் பாட் ஆகும். அமெரிக்க மதிப்பில் 258 மில்லியன் டொலராகும். இவ்வாறு அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தற்போதைய பிரதமர் பேடோங்டர்ன், முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள் ஆவார். இவர், கடந்த செப்டெம்பரில் தாய்லாந்து பிரதமராக பொறுப்பேற்றார். தாய்லாந்தை இவரது குடும்பம் தான் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தை ஆளும் அந்த குடும்பத்தின் நான்காவது வாரிசுதான் பேடோங்டர்ன்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...