Newsகாட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

காட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

-

சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும் என Grampians பூங்கா நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை முதல் MacKenzies Falls, Venus Baths மற்றும் Boroka Lookout ஆகியவை திறந்திருக்கும்.

பிரபலமான சுற்றுலா நகரமான Halls Gap-இல் ஏற்பட்ட காட்டுத்தீயினால் Grampians தேசியப் பூங்காவை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு 18 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படுகிறது.

Grampians-இல் கடந்த வருடம் இரண்டு தீ நிலைமைகள் ஏற்பட்டதாகவும் அதன் வருமானம் கூட 25 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளுக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், தீயணைப்பு வீரர்கள் பூங்காவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் Vic Emergency Service தெரிவித்துள்ளது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...