Newsலாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ - வீடுகளை இழந்துள்ள 30,000 பேர்

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – வீடுகளை இழந்துள்ள 30,000 பேர்

-

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 ஏக்கர் சிறிய நிலப்பரப்பில் தொடங்கிய காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 1,200 ஏக்கருக்குப் பரவி, அப்பகுதியில் உள்ள 10,000 வீடுகள் மற்றும் 13,000 கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலியின் கூற்றுப்படி,
தீயைக் கட்டுப்படுத்த 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து 30,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை மேலும் மோசமடையலாம் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பலத்த காற்று வீசியதால் தீயில் இருந்து எறியப்படும் தீப்பொறிகள் பல மைல்களுக்கு பயணித்து புதிய தீ பரவும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதுடன், அவசரநிலை ஏற்பட்டால் அப்பகுதியை விட்டு வெளியேற தயாராக இருக்குமாறு பிரதேசவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்கனவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் இரண்டு முறை வரி செலுத்த வேண்டுமா?

வரும் நாட்களில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறியுள்ளார். அதன்படி, பெட்ரோல் வாகன பயனர்களுக்கு...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரியாவில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று கிறிஸ்துமஸுக்கு முன்பு 3,500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது. Australia Post தனது பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த...

LGBTQ சமூகத்தை ஆதரிக்க விக்டோரியன் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை

வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவிக்கும் விக்டோரியன் LGBTQ சமூகங்களை ஆதரிப்பதற்காக விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய ஆதரவு சேவையைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய சேவை 'Switchboard Victoria'...

சர்க்கரை இல்லாமல் காபி குடித்தால் உடலுக்கு நல்லதா?

Caffeine கலந்த காபி குடிப்பதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும், இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. Tufts பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைக்...

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரு தொல்பொருள் பொருட்கள்

உக்ரைனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு தொல்பொருள் பொருட்கள் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சிட்னியில் நடந்த விழாவில்...