Newsவிமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

-

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, உரிய நடவடிக்கைகள் முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

41 வயதான அசங்க மெத்யூ என்ற இலங்கையர் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் மொழி பெயர்ப்பாளர் மற்றும் இரண்டு ஆதரவாளர்களுடன் ஆஜரானார்.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, டிசம்பர் 18ஆம் திகதி, சந்தேகத்திற்குரிய இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, அவர் மீது அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு. அசங்க மேத்யூ கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார் மற்றும் கடவுச்சீட்டை ஒப்படைத்தல், மாநிலம் அல்லது நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தல் மற்றும் வீட்டு ஊரடங்கு உத்தரவின் கீழ் வாழ்வது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் கீழ் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...