Newsவிமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

-

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, உரிய நடவடிக்கைகள் முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

41 வயதான அசங்க மெத்யூ என்ற இலங்கையர் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் மொழி பெயர்ப்பாளர் மற்றும் இரண்டு ஆதரவாளர்களுடன் ஆஜரானார்.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, டிசம்பர் 18ஆம் திகதி, சந்தேகத்திற்குரிய இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, அவர் மீது அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு. அசங்க மேத்யூ கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார் மற்றும் கடவுச்சீட்டை ஒப்படைத்தல், மாநிலம் அல்லது நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தல் மற்றும் வீட்டு ஊரடங்கு உத்தரவின் கீழ் வாழ்வது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் கீழ் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...