Sydneyசிட்னியில் குவிந்துள்ள 5 டன் பட்டாசு கழிவுகள்

சிட்னியில் குவிந்துள்ள 5 டன் பட்டாசு கழிவுகள்

-

புத்தாண்டைக் கொண்டாட சிட்னி அருகே சட்ட விரோதமாக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட இழப்பு
சாதனை உயரத்தை எட்டியுள்ளது.

இதன்படி, சட்டவிரோத பட்டாசு வெடிப்பினால் ஏற்பட்ட இழப்பு 50,000 டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட விரோதமாக பட்டாசு வெடித்ததால் ஐந்து டன் கழிவுகள் குவிந்துள்ளதாக சிட்னி பிராந்திய கவுன்சில் தெரிவித்துள்ளது.

க்ரீனேக்கரில் உள்ள ராபர்ட்ஸ் பூங்கா, வில்லாவுட்டில் உள்ள டுரினா பூங்கா மற்றும் பாஸ் ஹில்லில் உள்ள வால்ஷா பூங்கா ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.

இப்பகுதியை சுத்தம் செய்வதற்கு 20,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் 30,000 டொலர்கள் சேதமடைந்துள்ள மூன்று கிரிக்கெட் மைதானங்களை புனரமைப்பதற்காக செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வார இறுதியில் நடைபெறவிருந்த உள்ளூர் கிரிக்கட் நிகழ்வொன்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மூன்று இடங்களில் ஐந்து தொன் கழிவுகளும் சேகரிக்கப்பட்டதாக உள்ளுராட்சி சபை தெரிவித்துள்ளது. பரிசோதிக்கப்படாத நபர்களின் “அலட்சியமாக” நடந்து கொண்டதால், மாநில அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சி மன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத பட்டாசுகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிட்னி காவல்துறை எச்சரித்துள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...