Newsபோப் ஆண்டவர் உடல் நலக்குறைவு - உரையை வாசித்த உதவியாளர்

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு – உரையை வாசித்த உதவியாளர்

-

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வத்திக்கானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக வெளிநாட்டுத் தூதர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வத்திக்கானில் 9ம் திகதி நடந்தது. போப் ஆண்டவரின் உரையைக் கேட்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் வந்திருந்தனர். அவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது உரையை தொடங்கினார்.

ஆனால் உரையின் சில வரிகளை மட்டுமே வாசித்த போப் ஆண்டவர், தான் சளியால் அவதிப்படுவதாகவும் எனவே தனது உரையை உதவியாளர் வாசிப்பார் என்றும் தெரிவித்தார்.

அதன்படி போப் ஆண்டவரின் நீண்ட உரையை அவரது உதவியாளர் வாசித்தார். 88 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் அண்மைக் காலமாக வயோதிபம் தொடர்பான பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...