Newsஇங்கிலாந்தில் நடந்த விசித்திர உலக சாம்பியன்ஷிப் போட்டி

இங்கிலாந்தில் நடந்த விசித்திர உலக சாம்பியன்ஷிப் போட்டி

-

இங்கிலாந்து நாட்டில் அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

வடமேற்கு இங்கிலாந்து நாட்டின் கும்பிரியா எனும் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவலட்சணமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் அசாதாரண போட்டியான, உலக கர்னிங் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த வருடம் அங்கு நடைபெற்ற கிராப் கண்காட்சியில் இப்போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் ஏறி தங்களது முகத்தை சுளித்து பல்வேறு வினோத பாவணைகள் செய்து அவலட்சணமான முகத் தோற்றத்தை உருவாக்கிக்காட்ட வேண்டும்.

அதில் யாருடைய முகம் அருவருப்பாகவும் அவலட்சணமான தோற்றத்தை வெளிப்படுகிறதோ அவருக்கு நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில், டாமி மேட்டின்சன் என்பவர் 18 முறை உலக கர்னிங் சாம்பியன்ஷிப் வென்று உலக சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அவரது அப்பா 10 முறை உலக கர்னிங் சாம்பியனாக இருந்ததாகவும், அந்த பாரம்பரியத்தை கடைபிடித்து தானும் இந்த போட்டியில் பங்கேற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...