Newsபாகிஸ்தான் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

-

பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த 9ஆம் திகதி திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர்.

இந்நிலையில், அவர்களை மீட்கத் தொடர்ந்து 3 நாட்களாக மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், முதலில் 4 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். 3000அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் தவிர, 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்கக் கூடும் என கூறப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்தும் இடம்பெற்ற மீட்பு பணியின் ஒரு பகுதியாக, மீதமுள்ளவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால்சுரங்க விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளன.

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...