Newsமகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

-

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு இலட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 13 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் அதிகபட்சமாக 46 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா கும்பத்தில் தினமும் 1 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அன்னதானம் குழு அதிகாரி ஒருவர்

”எங்களிடம் நிறைய இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். இங்கு 500க்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கிறார்கள். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவு பரிமாறுகிறார்கள்.

எங்களிடம் 2,000 கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய குளியலறை உள்ளது. சமையலறையில் ஒரே நேரத்தில் 2,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதிக அளவு காய்கறிகளை வெட்டுவதற்கான இயந்திரங்களும் உள்ளன”. என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...