Newsமகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

-

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு இலட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 13 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் அதிகபட்சமாக 46 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா கும்பத்தில் தினமும் 1 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அன்னதானம் குழு அதிகாரி ஒருவர்

”எங்களிடம் நிறைய இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். இங்கு 500க்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கிறார்கள். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவு பரிமாறுகிறார்கள்.

எங்களிடம் 2,000 கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய குளியலறை உள்ளது. சமையலறையில் ஒரே நேரத்தில் 2,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதிக அளவு காய்கறிகளை வெட்டுவதற்கான இயந்திரங்களும் உள்ளன”. என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...