Newsமகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

-

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு இலட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 13 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் அதிகபட்சமாக 46 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா கும்பத்தில் தினமும் 1 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அன்னதானம் குழு அதிகாரி ஒருவர்

”எங்களிடம் நிறைய இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். இங்கு 500க்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கிறார்கள். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவு பரிமாறுகிறார்கள்.

எங்களிடம் 2,000 கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய குளியலறை உள்ளது. சமையலறையில் ஒரே நேரத்தில் 2,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதிக அளவு காய்கறிகளை வெட்டுவதற்கான இயந்திரங்களும் உள்ளன”. என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest news

சந்தையில் இருந்து நீக்கப்பட்டபிரபலமான Sunscreen தயாரிப்பு

பிரபலமான Sunscreen தயாரிப்பு ஆஸ்திரேலிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரபலமான Sunscreen பிராண்டான Ultra Violette, அதன் Lean Screen SPF 50+ Mattifying...

பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Noojee Trestle பாலம்

விக்டோரியாவின் மிக உயரமான மரப் பாலமான Gippsland-இல் உள்ள Noojee Trestle பாலம், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் பாதுகாப்புப் பழுதுபார்ப்புக்காக கடந்த மே மாதம்...

ரணில் ஏன் ஜாமீனை இழந்தார்?

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உயர்...

அழகான சமையல் பாத்திரங்களை வாங்குவது உடல்நலத்திற்கு ஆபத்தானது!

வீட்டு சமையலறை பயன்பாட்டிற்கான சமையல் உபகரணங்களை வாங்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான பொருளாக சிலிகானை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெர்மனியின்...

பெர்த் மழைநீர் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய் கண்டுபிடிக்கப்பட்டார்!

பெர்த் மழைநீர் வடிகாலில் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட தனது பிறந்த மகனின் மரணத்தை மறைத்ததாக ஒரு தாய் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து...

ட்ரம்பின் Alligator Alcatraz தடுப்பு மையத்தை அகற்ற நீதிபதி உத்தரவு.

புளோரிடாவில் உள்ள "Alligator Alcatraz" இல் புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஒரு கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் Florida Everglades-இல் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு...