Newsஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு அவசரம் காட்ட வேண்டாம் - உலக...

ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு அவசரம் காட்ட வேண்டாம் – உலக வங்கி தலைவர்

-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகள் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அதன்பின் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகள் பல உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, “உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்.. எந்தவொரு முடிவுக்கும் வரவோ அல்லது பதிலளிக்கவோ அவசரம் காட்டாதீர்..” என்று தெரிவித்துள்ளார்.

டான்ஸானியா நாட்டில் நடைபெற்ற ’மிஷன் 300 ஆப்பிரிக்க எரிசக்தி மாநாட்டில்’ பங்கேற்ற அஜய் பங்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தெந்த கொள்கைகளெல்லாம் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கொள்கை வகுப்பாளர்கள் பொறுத்திருந்து பார்த்து அதன்பின் செயல்படவும். டொனால்ட் ட்ரம்ப்புடன் சேர்ந்து நான் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் நடைமுறை சாத்தியக்கூறுகளுகளை அறிந்து செயல்படும் ஒரு மனிதர்.

அமெரிக்க அரசுப் பணியாளர்கள் வாரத்தில் 5 நாள்கள் அலுவலகங்களுக்கு வருகை தர டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், உலக வங்கியில் பணியாற்றும் பணியாளர்கள் வாரத்தில் 4 நாள்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றும் நடைமுறையில் எவ்வித மாற்றமுமில்லை. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...