Newsஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு அவசரம் காட்ட வேண்டாம் - உலக...

ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு அவசரம் காட்ட வேண்டாம் – உலக வங்கி தலைவர்

-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகள் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அதன்பின் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகள் பல உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, “உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்.. எந்தவொரு முடிவுக்கும் வரவோ அல்லது பதிலளிக்கவோ அவசரம் காட்டாதீர்..” என்று தெரிவித்துள்ளார்.

டான்ஸானியா நாட்டில் நடைபெற்ற ’மிஷன் 300 ஆப்பிரிக்க எரிசக்தி மாநாட்டில்’ பங்கேற்ற அஜய் பங்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தெந்த கொள்கைகளெல்லாம் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கொள்கை வகுப்பாளர்கள் பொறுத்திருந்து பார்த்து அதன்பின் செயல்படவும். டொனால்ட் ட்ரம்ப்புடன் சேர்ந்து நான் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் நடைமுறை சாத்தியக்கூறுகளுகளை அறிந்து செயல்படும் ஒரு மனிதர்.

அமெரிக்க அரசுப் பணியாளர்கள் வாரத்தில் 5 நாள்கள் அலுவலகங்களுக்கு வருகை தர டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், உலக வங்கியில் பணியாற்றும் பணியாளர்கள் வாரத்தில் 4 நாள்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றும் நடைமுறையில் எவ்வித மாற்றமுமில்லை. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

இந்தோனேசிய ஜனாதிபதியின் பூனையை கொஞ்சிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபரின் பூனையான 'பாபி'யை செல்லமாக வளர்ப்பது போன்ற காட்சியை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்தோனேசிய அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது...

சிட்னி தெருவில் படகுகளை நிறுத்தியவர்களுக்கு $28,000 அபராதம்

ஆஸ்திரேலியாவின் Randwick நகர சபை, புறநகர் வீதிகளில் படகுகள் மற்றும் டிரெய்லர்களை நிறுத்துபவர்களுக்கு $28,000 அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் புகார்களின் அடிப்படையில் 400 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...

Richmond பள்ளத்தாக்கில் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு NSW அரசாங்கம் ஒப்புதல்

Richmond பள்ளத்தாக்கில் உள்ள Summerville சூரிய மின் உற்பத்தி பண்ணைக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது . இதன் மூலம் 90 மெகாவாட் மின்சாரம்...