Cinemaஇயக்குனராகும் 'லப்பர் பந்து' நாயகி

இயக்குனராகும் ‘லப்பர் பந்து’ நாயகி

-

‘லப்பர் பந்து’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை இயக்குனராக இருப்பதாகவும், அவரது முதல் படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் நடித்த ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் வசூலிலும் சக்கை போட்டு போட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் நாயகி ஆக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்தது. ஏற்கனவே ‘வதந்தி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பதும், தற்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிவதோடு, அந்த படத்தில் ஒரு கேரக்டரில் சஞ்சனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு கதையை எழுதி, அந்த கதைக்கான நாயகனே தேடிவந்த நிலையில், கவினிடம் அவர் சொன்ன கதை ஒர்கவுட் ஆகிவிட்டதாகவும், இதனை அடுத்து கவின் நடிக்கும் 9வது படத்தை சஞ்சனா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சனா இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...