Cinemaஇயக்குனராகும் 'லப்பர் பந்து' நாயகி

இயக்குனராகும் ‘லப்பர் பந்து’ நாயகி

-

‘லப்பர் பந்து’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை இயக்குனராக இருப்பதாகவும், அவரது முதல் படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் நடித்த ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் வசூலிலும் சக்கை போட்டு போட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் நாயகி ஆக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்தது. ஏற்கனவே ‘வதந்தி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பதும், தற்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிவதோடு, அந்த படத்தில் ஒரு கேரக்டரில் சஞ்சனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு கதையை எழுதி, அந்த கதைக்கான நாயகனே தேடிவந்த நிலையில், கவினிடம் அவர் சொன்ன கதை ஒர்கவுட் ஆகிவிட்டதாகவும், இதனை அடுத்து கவின் நடிக்கும் 9வது படத்தை சஞ்சனா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சனா இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தொழில்துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்ப்

ஆஸ்திரேலிய எஃகுத் தொழிலுக்கு கடுமையான அடியாக, இறக்குமதிகள் மீதான தற்போதைய வரிகளை இரட்டிப்பாக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கிறார். ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன்...

நாளை முதல் உயரும் மாணவர் கடன் விகிதங்கள்!

நிலுவையில் உள்ள மாணவர் கடன்களைக் கொண்ட மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு $2.5 பில்லியனுக்கும் அதிகமான கடன் அதிகரிப்பு நாளை முதல் அமலுக்கு வரும். மாணவர் கடன்களை 20...

இளைஞர்களின் போதைப் பழக்கத்தால் முழு நாடும் ஆபத்தில்

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், Vaping-ஐ பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக ஒரு புதிய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் சுகாதார நிறுவனத்தின்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...