Newsதென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

-

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 ஆவது தளத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த தீயானது 4ஆவது தளத்துக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக வெளியான CCTV காட்சிகளில் அருங்காட்சியகக் கட்டடத்திலிருந்து கருநிற புகை வெளியாவது பதிவாகியுள்ளது. கட்டடத்தினுள் சிக்கியிருந்த அருங்காட்சியக பணியாளர்கள் 4 பேரும் பத்திரமாக மிட்கப்பட்டனர்.

மேலும், அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதினால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், மீட்புப் பணிக்காக உள்ளே சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் கொரிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகத்தில் 1443 ஆம் ஆண்டைச் சேர்ந்த கொரிய மொழியின் அரிதான எழுத்துக்கள் பொறித்த பழமையான பொருள்கள் பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest news

அழகான சமையல் பாத்திரங்களை வாங்குவது உடல்நலத்திற்கு ஆபத்தானது!

வீட்டு சமையலறை பயன்பாட்டிற்கான சமையல் உபகரணங்களை வாங்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான பொருளாக சிலிகானை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெர்மனியின்...

ட்ரம்பின் Alligator Alcatraz தடுப்பு மையத்தை அகற்ற நீதிபதி உத்தரவு.

புளோரிடாவில் உள்ள "Alligator Alcatraz" இல் புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஒரு கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் Florida Everglades-இல் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு...

Sunshine Coast கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான சாதனம் – வெடிக்க செய்த பொலிஸார்

குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஆபத்தான சாதனத்தை சிறப்பு போலீசார் வெடிக்கச் செய்துள்ளனர். தண்ணீருக்கு அருகில் உள்ள காலியான கடற்கரையில்...

தெற்கு ஆஸ்திரேலிய மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்

தெற்கு ஆஸ்திரேலிய நிதி அதிகாரி அலுவலகத்திற்கு வெளியே 180க்கும் மேற்பட்ட மருத்துவமனை மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தியேட்டர் டெக்னீஷியன்கள், மருத்துவமனை...

மெல்பேர்ணில் $7 மில்லியனுக்கும் அதிகமான புகையிலை, பணம் மற்றும் கைக்கடிகாரங்கள் பறிமுதல்

மெல்பேர்ணில் பணமோசடி கும்பல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தொடர்பான பல விசாரணைகளுக்குப் பிறகு, 7 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை , ஆடம்பர கடிகாரங்கள்...

தெற்கு ஆஸ்திரேலிய மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்

தெற்கு ஆஸ்திரேலிய நிதி அதிகாரி அலுவலகத்திற்கு வெளியே 180க்கும் மேற்பட்ட மருத்துவமனை மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தியேட்டர் டெக்னீஷியன்கள், மருத்துவமனை...