குயின்ஸ்லாந்தில் இந்த நாட்களில் கனமழை பெய்து வருவதால், வரும் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குயின்ஸ்லாந்து பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும், உத்தரவை மீறி தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளத்தில் சிக்கி 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1200 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டவுன்ஸ்வில்லி மற்றும் இங்காம் பகுதி மக்கள் தொடர்ந்தும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் இது குறித்து முடிந்தவரை அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்புகளை மக்கள் பின்பற்றாததே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று மாநில பிரதமர் கூறினார்.
குயின்ஸ்லாந்தின் மிகப்பெரிய அணையான ராஸ் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதிக்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்வதால், மக்கள் வெளியேற்ற உத்தரவுகளையும் எச்சரிக்கைகளையும் கவனிக்குமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
முர்ரே ஆறு, ஹெர்பர்ட் ஆறு, போல்லே ஆறுகள் மற்றும் மேல் பர்டேகின் நதிப் பகுதிகளும் ஆபத்தில் உள்ளன.