Newsகுயின்ஸ்லாந்து மக்களுக்கு மற்றொரு வெள்ள அபாய எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மக்களுக்கு மற்றொரு வெள்ள அபாய எச்சரிக்கை

-

குயின்ஸ்லாந்தில் இந்த நாட்களில் கனமழை பெய்து வருவதால், வரும் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குயின்ஸ்லாந்து பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும், உத்தரவை மீறி தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1200 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டவுன்ஸ்வில்லி மற்றும் இங்காம் பகுதி மக்கள் தொடர்ந்தும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் இது குறித்து முடிந்தவரை அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிவிப்புகளை மக்கள் பின்பற்றாததே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று மாநில பிரதமர் கூறினார்.

குயின்ஸ்லாந்தின் மிகப்பெரிய அணையான ராஸ் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதிக்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்வதால், மக்கள் வெளியேற்ற உத்தரவுகளையும் எச்சரிக்கைகளையும் கவனிக்குமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

முர்ரே ஆறு, ஹெர்பர்ட் ஆறு, போல்லே ஆறுகள் மற்றும் மேல் பர்டேகின் நதிப் பகுதிகளும் ஆபத்தில் உள்ளன.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...