Newsபாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny...

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

-

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் புதன்கிழமையன்று (5ம் திகதி) தலைநகர் கேன்பராவில் தெரிவித்தார்.

பாலினச் சமத்துவம் நாட்டில் நிலவும் அமைதியைக் காட்டுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவன நிகழ்வு ஒன்றில் அமைச்சர் வோங் கூறினார்.

பெண்களின் பாலியல், இனப்பெருக்க சுகாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் நிதி தொடர்பான விவகாரங்களில் பெண்களைச் சேர்த்துக்கொள்வதும் ஆஸ்திரேலியாவின் புதிய அனைத்துலகப் பாலினச் சமத்துவ உத்தியின் இலக்காகும்.

“உலகெங்கும் பெண்களுக்கு எதிராகப் பாலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது, பாலியல், இனப்பெருக்க சுகாதாரச் சேவைகள் போதுமான அளவில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை,” என்று வோங் கூறினார்.

பசிபிக் வட்டாரத்தில் மூன்றில் இரு பெண்கள் உடல்ரீதியிலான அல்லது பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாவதாக அவர் கூறினார்.

உலகளாவிய நிலையில், 380 மில்லியன் பெண்கள், சிறுமிகள் கடும் வறுமையில் வாடுவதாகவும் 2.4 பில்லியன் பெண்களுக்கு சமமான பொருளியல் வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...