Breaking NewsBREAKING NEWS : ஒஸ்ரியாவில் வீதியில் சென்றவர்கள் மீது கத்திகுத்து -...

BREAKING NEWS : ஒஸ்ரியாவில் வீதியில் சென்றவர்கள் மீது கத்திகுத்து – 14 வயது சிறுவன் பலி

-

ஒஸ்ரியாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒஸ்ரியாவின் தெற்கு பகுதியில் உள்ள வில்லாச் நகரில் நேற்று (15) வீதியோரம் நடந்து சென்றவர்கள் மீது சுமார் 23 வயது நிரம்பிய இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் 14 வயது நிரம்பிய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர், சிரியாவைச் சேர்ந்தவர் என்பதும், ஒஸ்ரியாவில் சட்டப்பூர்வமாக குடியேறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரின் தனிப்பட்ட பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதோடு கைது செய்யப்பட்ட நபர், தானாக இந்த தாக்குதலை நடத்தினாரா? அல்லது வேறு நபர்களின் தூண்டுதலால் இவ்வாறு செய்தாரா? என்பது தெரியவில்லை. வேறு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...