Newsபுற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

-

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

புற்றுநோய்க்கான M.R.N.A தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்..

இந்த தடுப்பூசியானது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் சந்தையில் அறிமுகமாகவுள்ளதோடு எந்தவித கட்டணமுமின்றி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் கட்டி வளர்வதை தடுப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி , புற்றுநோய் தடுப்பு மருந்து உருவாக்கத்தினை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது அது குறித்து ரஷ்யா அறிவித்துள்ளது.

புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு கொண்ட செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் பணியை இந்த தடுப்பூசிகள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...